வெள்ளி, 3 ஜூலை, 2009

பரிபாசை


எல்லா நிகழ்வும் பேசி முடித்த பிறகும்

உதடுகள் ஓயாமல் பேசிகொன்டன

மோகம் என்னும் மொழியில்

முத்தம் என்னும் பரிபாசை

புதன், 24 ஜூன், 2009

நினைவுகள்!!!


புதைந்தோ எறிந்தோ நான் சிதைந்து போகும் வரை
சிதையாதிருக்கும்
நான் உன்னை மனதால் காதலித்து
மறுதலித்த நாட்கள்!!!

உன்னுடையவன்


நான் வாழும்போது எப்படியோ தெரியாது

இறக்கும் போது உன்னுடயவனாகவே

இறப்பேன் !!!!!

அறிமுகம்!!!


நம் சந்திப்பையும் அறிமுகத்தையும் வியப்பவர்கள்

உன் மீதான என் காதலை மட்டும் வியக்கவில்லை

உன்னை எல்லோரும் காதலிப்பதாலா

இல்லை நான் எல்லோரையும் காதலிப்பதாலா

கவிதை தீ


என் கற்பனை காடுகளில் கவிதை தீ பிடிக்க

தீ பொறி வேண்டும்

பெண்ணே உன் கருவிழி திறந்து

ஒரு கந்தக பார்வை பார்

வார்த்தை கரையான்!!!


உனக்காக எழுதும் போது மட்டும்

விரல்களையும் தாண்டி குதிக்கும் வார்த்தைகள்!!!

இதயம் தான் தாளில் பதிப்பதில்லை.

நட்பின் வேர்களை வார்த்தை கரையான்கள்

அரித்து விடுமோ என்று!!!

வெறுமை


நீ இல்லாத நாட்களின்

வெறுமையை

உன் கவிதைகளின் வாசிப்பிலும்

உனக்கான கவிதைகளின் பிரசவிப்பிலும்

தொலைக்க துடிக்கிறது மனது

நிழலோடு தொடரும் என் இதயம்


எங்கோ உன்னை தொடரும் நிலவில் தான் கடைசியாய்

பார்த்தேன்

என் காணாமல் போன இதயத்தை !!!

கடந்து போன பார்வைகள்!!!


இளமையில்

பார்வை பரிமாறல்கள்

விழியால் காதல் விருந்து

இதழ்களால் இயலாத மொழிதல்கள்

இமைக்குலிருந்து அழகாய் வந்து செல்லும்

யாருக்கும் புரிவதில்லை

கண் வலி உறவுகளை தவிர

கண் வலி கண்டதெலாம் நினைவுடன் சேரும்போது

எங்கிருந்தோ வருகின்றன அலையா விருந்தாளி கனவுகள்

இப்படியே கவிஞன் ஆகிறான்

காதலன் ஆகிறான் ஆனால்

பணியாய் காதல் காற்றோடு களைய

எங்கோ வேறு யாருடனாவது

மீண்டும் தொடர்கிறது தேடல்

போன முறை அர்த்தம் தெரியாமல்

போன பார்வைகளின் உள்ளர்த்தம் தேடி

ரகசியம்!


பெண்ணே உன் ஒவ்வொரு உறசலளிலும் தேய்கிறது

உனக்குள் நீயும் எனக்குள் நானும் ஒலித்து வைத்த

ரகசியங்கள் !!!

ஒட்டுண்ணி!!!


காதல் வளர்வதாய் தெரியவில்லை

ஒட்டுண்ணி நட்புதான் உறிஞ்சி வளர்கிறது

நமக்குள் இருக்கும் புரிதல்களை!!!

காதலன்


காதலன் என்று சொன்னால் கனவுகள் தருவேன்

கணவன் என்று சொல் உயிரையும் தருவேன்

வெள்ளி, 22 மே, 2009

உண்மை காதல்


உள்ளதை சொல்லாமல்

உள்ளத்தை சொல்லாமல்

வேறென்ன உண்மை காதல்

புதன், 25 மார்ச், 2009

பயணம்


பழகிய பாதை
நெடுந்தூர பயணம்
ஜன்னலோர இருக்கை
எதிரில் நீ
நான் ரசிப்பது எதை!!!

வெள்ளி, 13 மார்ச், 2009

குழந்தை





திருவிழா கூட்டத்தில் காணாமல் போன

குழந்தையாய் அழுது கொண்டிருக்கிறது என் மனது

நியோ வேடிக்கை பார்த்து கொண்டிருகிறாய்

தொலைந்த குழந்தையை மறந்து

அன்பானவள் !!!


விரசமிலாமல் உன் விழி நோக்கி

இருந்தால் போதும்

சலனமிலாமல் என் இளமை இன் இட்சைகள் சாகும்

தவிர்ப்பு


ஏன் என்னை தவிர்க்கிறாய்
யாராவது சொன்னார்களா
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
நான் சொல்லவில்லையே நீ யும் என்னை
காதலிக்க வேண்டும் என்று

கண்களின் வார்த்தைகள்


உன்னிடம்
என் இதயம் சொல்ல துடிப்பதை
என் இதழ்கள் சொல்ல மறுப்பதை
என் கண்கள் சொல்லி விடுகின்றன

ஜீவ நதி


ஆயிரம் அருவிகளால் கூட

மாற்றுக்கு உதாரணம் காட்ட

இயலாத என் ஜீவ நதி நீ

மனது


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய

பசுவாக தத்தளித்து திணறி நிற்கிறது

உன்னிடம் சிக்கிய என் மனது

மந்திரங்கள்


மந்தரித்து விட்ட கோழியாய் மனது
அதை மயக்கும் மந்திரங்கள் உன்னது

மறக்க முடியவில்லை


வேறொன்றும் வேண்டாம்

என் அருகிலயே இரு

உன்னை பார்த்தே நான் உலகை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் என்னை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் உன்னை மறக்க முயற்சிகிறேன்

மிச்சம்


நீ பிரிந்த பின்னும்

என்னோடு மிச்ச பட்டுவிட்டது

உன் புன்கையின் தாக்கங்களும்

என் புரையோடிய நினைவுகளும்

காதல் மொழி


காதல் இதயத்தின் தாய் மொழி
இதழ்களை விடவும்
கண்களே அதிகம் பேசுகின்றன!!

கவிதை


நம் காதலை பற்றி
கவிதை எழுத சொன்னாய்
எழுத முடியவில்லை
உண்மையை எப்படி பொய்யால் புகழ்வது

காதல் சிற்பி


நான் ஒரு சிற்பி
கண்ணீர் சிற்பி
காதலை செதுக்க வந்த
கண்ணீர் சிற்பி
முகத்தில் தாடி
நான் போட்ட வேலி
கண்ணீர் மட்டுமே
நான் கொண்ட தோழீ

புரிதல்


ஒரு துளி புரிதல் கூட இல்லாததால் இன்னமும் நிறையாமல்
கிடக்கிறது உனக்கும் எனக்குமான நட்பு கோப்பை
கனிந்து உருகும் காதலின் கைகளில்

கண்மணிக்கு



கண்மணிக்கு
கண்ணாய் என் கருத்தாய்
காதலாய் கனவாய்
சுவாசம் நிறை காற்றாய்
சுகமாய் சுமக்கின்ற வழியாய்
நிரம்பி வழிகிறாய்
ஞாபக கின்னங்களில்
வழிகிற துளிகளில் என்
நினைவும் கலைகிறது
வெறுமைக்குள் வெடிக்கும்
இதயத்தின் ஏக்க தணலில்
வேகுமா என் இன்றைய உணவிற்கான உலை

வெறுமைக்கும் வறுமைக்கும் இடையிலான

உரையாடல்களை ஒதுக்கி விட்டு

ஒடுங்கிய உடலில் வற்றி போய்விட்ட
நரம்புகளின் தளர்ச்சியையும் மீறி
நாடி துடிக்கிறது கண்கள் நிலைகுத்தி
மூச்சு அடங்கும் வேலைக்குள்
உன் முந்தானை காற்றில்
ஒரு மூச்சு வாங்கிவிடலாம் என்று