நான் ஒரு நதி
ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான்
என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில்
பயன் ஒன்றும் இல்லை
தரிசை பசுமையாக்கி
உழவனுக்கு பரிசாய் தருவேன்
நன்றி இருந்தால்
என் பாதையை செப்பனிடுவான்
இல்லாதவன் என்னை தனதாக்கி
கொள்ள பார்ப்பான்
யாருக்கும் அடங்குவதில்லை நான்
யாருக்கும் புரிவதில்லை
அணை கொண்டு
என்னை அடக்கிட துணிந்தால்
முட்டி நான் பார்பேன்
முடியாது போனால்
மூழ்கடித்து போவேன்
நான் ஒரு நதி ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான் என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில் பயன் ஒன்றும் இல்லை
திங்கள், 29 நவம்பர், 2010
திங்கள், 22 நவம்பர், 2010
காதலின் வெளிப்பாடு
சனி, 20 நவம்பர், 2010
அன்பின் வெளிப்பாடு
முத்தமா உன் தர்க்கமா

வாதம் தடித்து
வரம்புகள் தாண்டி
வசைகள் தொடங்கும் நிலையில்
உன் தர்க்கத்தை முடிக்கும் உபாயங்கள்
தோல்வியுறும் வேலையில்
உன் உதடுகள்
வார்த்தைகள் உதிர்க்காதிருக்க
என் உதட்டால் கவ்வி பிடிக்கிறேன்
வாதங்கள் ஓய்ந்து
காதல் அரும்பும் வேலையில்
என்னிடம் விளங்காது நிற்கிறது ஒரு கேள்வி
வென்றது என் முத்தமா உன் தர்க்கமா
வெள்ளி, 19 நவம்பர், 2010
இயல்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



