செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காதல்


காதல் ஒருமுறை தான் வரும் என்ற இலக்கிய வாதங்கள்
ஏன் எனக்கு பொருந்துவதில்லை
ஒரு வேலை அது ஒரு பெண்ணின் மீது ஒரு முறை தான் வரும் என்பதாக இருக்குமோ

நானும் நீயும்


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றாய்
என்னை எனக்கு எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு

கண்களும்!! காதலும்!!!


உன்னிடம் காதல் வெளிபடுத்தும் தருணங்கள்
வாய்க்கும் போதெலாம் நானே தவிர்க்கிறேன்
நமக்குள் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால்
நம் இருவர் கண்களை தவிர எல்லா கண்களுக்கும்
ஏதோ ஒன்று நம்மிடையே உறுத்தி கொண்டு தெரியும்
நமக்குள் பிடிக்கவில்லை என்றாலோ நம் இருவர் கண்களும்
ஒன்றை ஒன்று
சந்திப்பை வெறுத்து விலகும்
இதற்கு
சொல்லாமலே இருந்து விடலாம்

அழகான காதலோடும் சுகமான வலிகளோடும்

என் காதல்


இயைந்து,
கெஞ்சி,
மன்றாடி,
அழுது பெறுவதற்கு
என் காதல் ஒன்றும்!!
உன் எச்சில் பிச்சை இல்லையடி!!!