என் பார்வைகள் அர்த்தம் உனக்கு புரியாத போதிலும்
சுற்றம் பேசும் கேலிகள் உன்னை சேராத போதிலும்
என் இதயத்தின் தூது உன்னை வந்து சேராது போகினும்
என் நடத்தைகள் உன்னை ஈர்க்காது போயினும்
என் கவிதையின் காரணம் நீ அறியாது கடந்தாகினும்
என் சுற்றத்தின் உன் மீதான கரிசனம்
நீ கவனிக்கத் தவறினும்
என் காதலை நீ உணரவே இல்லாத மோதிலும்
கடலில் விழும் மலையென என் உணர்வுகள் குணம் மாறினும்
உயிரின் வலியை உணராத நிலையிலும்
வற்றாது காதல்
வாழாத நிலையிலும்
வீழாது காதல்