ஞாயிறு, 12 மே, 2024

உயிர்

நீரடித்து நீர் பிரியாது
உயிர் வெடித்து உறவு பிரியாது
உயிராய் கொண்டபின் உறவில் பிரிவேது
உறவில் உனக்கு புரிதல் 
இல்லையென்றாலும் 
உயிர் என்னைபிரிந்தால் நான் சவமில்லையா
நான் உயிர்த்திருப்பது 
உன் உணர்வால்
இல்லையா

சவம்

உறவென்பது காமமல்ல
உணர்வென்பது மோகமல்ல
துனையென்பது உடலல்ல
துஞ்சலென்பது இச்சையல்ல
இடரென்பது பிரிவல்ல
அன்பென்பது இசைவல்ல
காதல் என்பது களவல்ல
உயிர் சுமக்கும் கூடூ
உன்னையும் சுமக்கும்
என்றால்
உயிர் நீ அன்றோ
உணர்வும் நீ அன்றோ
உயிரும் உணர்வும் அற்றுப் போனால்
சவமன்றோ
நீ அற்ற நான் சவமன்றோ

புதன், 18 மே, 2022

காதல்

என் வார்த்தைகள் கொண்டு சொல்லாத போதிலும்
என் பார்வைகள் அர்த்தம் உனக்கு புரியாத போதிலும்
சுற்றம் பேசும் கேலிகள் உன்னை சேராத போதிலும்
என் இதயத்தின் தூது உன்னை வந்து சேராது போகினும்
என் நடத்தைகள் உன்னை ஈர்க்காது போயினும்
என் கவிதையின் காரணம் நீ அறியாது கடந்தாகினும்
என் சுற்றத்தின் உன் மீதான கரிசனம் 
நீ கவனிக்கத் தவறினும்
என் காதலை நீ உணரவே இல்லாத மோதிலும்
கடலில் விழும் மலையென என் உணர்வுகள் குணம் மாறினும்
உயிரின் வலியை உணராத நிலையிலும்
வற்றாது காதல்
வாழாத நிலையிலும்
வீழாது காதல்

தீரா நினைவு

தீ கணன்ற இடத்தில் படர்ந்த கரியென
நீ நிலைத்த இதயத்தில் படர்ந்தது நினைவுகள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

தனிமையின் வெம்மை

 நீண்டு கிடக்கும் நாட்கள்

தனிமையின் தாபம் பேசி இன்னும் நீழ்கிறது

நிலையற்று தளும்பும் நீரின் மேற்பரப்பென

நினைவு அலைபாய்கிறது

காற்றின் திசையில் விரையும் சருகென

மனம் உன் திசை பார்த்து தவிக்கிறது

புழுதி படர்ந்த புறவழிச்சாலையென

வெறிச்சோடிக்கிடக்கிறது நீ இல்லாத வீடு 

காட்சி மயக்கமாய் வீடெங்கும் பரவிக் கிடக்கும் காதல் நினைவுகள்

விரகத்தின் தவிப்பை கூட்டுகிறது

நீ இனி போகும் போது என் நினைவையும் கொத்திப் போய்விடு

தனிமையை வலியை சுயநினைவின்றியே கடத்தலாம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காதல் சுமந்து

 உன்னை தீண்ட காத்திருந்தேன்

பின் உன்னை சந்திக்க காத்திருந்தேன்

பின் உன் முகம் பார்க்க காத்திருந்தேன்

இன்று உன்னோடு பேச காத்திருக்கிறேன்

நாளை உன் குருஞ்செய்திக்காக காத்திருக்கும் நிலை வந்தாலும் காத்திருப்பேன்

காதல் சுமந்து

உயிர் சுமந்த கூடு

 என் உயிர் நோகும் என தெரிந்தும்

உள்ளம் நோகும் என தெரிந்தும்

உயிர் இல்லா கூடென என் நிலை மாறும் என தெரிந்தும்

வார்த்தை ஈட்டிகளால்

என் உயிர் வதைத்தல் முறையா