செவ்வாய், 20 டிசம்பர், 2016

நிலை

நீ நிலமாய் விரிந்தால் நான் மணலாய் படர்கிறேன்
நீ கல்லாய் சமைந்தால் நான் சிலையாய் அமைகிறேன்
நீ விதையாய் விழுந்தால் நான் நிலமாய் சுமக்கிறேன்
நீ நெருப்பாய் கணன்றாள் நான் குளிர் காண்கிறேன்
நீ மரமாய் எழுந்தான் நான் நிழலில் இளைப்பாறுகிறேன்
நீ நதியாய் நடந்தால் என் நிலம் வளமாகிறேன்
நீ மழையாய் பொழிந்தால் என் தாகம் தணிகிறேன்
நீ வெயிலாய் சுட்டாள் என் மேனி காய்கிறேன்
நீ என் நிலை கொண்டாலும் என் நிலை மாறி
 நான் உனை உள்வாங்கிக் கொள்கிறேன்
காதல் மாறாதது காதலால் நான் மாறுகிறேன்

கருத்துகள் இல்லை: