புதன், 24 ஜூன், 2009

நினைவுகள்!!!


புதைந்தோ எறிந்தோ நான் சிதைந்து போகும் வரை
சிதையாதிருக்கும்
நான் உன்னை மனதால் காதலித்து
மறுதலித்த நாட்கள்!!!

உன்னுடையவன்


நான் வாழும்போது எப்படியோ தெரியாது

இறக்கும் போது உன்னுடயவனாகவே

இறப்பேன் !!!!!

அறிமுகம்!!!


நம் சந்திப்பையும் அறிமுகத்தையும் வியப்பவர்கள்

உன் மீதான என் காதலை மட்டும் வியக்கவில்லை

உன்னை எல்லோரும் காதலிப்பதாலா

இல்லை நான் எல்லோரையும் காதலிப்பதாலா

கவிதை தீ


என் கற்பனை காடுகளில் கவிதை தீ பிடிக்க

தீ பொறி வேண்டும்

பெண்ணே உன் கருவிழி திறந்து

ஒரு கந்தக பார்வை பார்

வார்த்தை கரையான்!!!


உனக்காக எழுதும் போது மட்டும்

விரல்களையும் தாண்டி குதிக்கும் வார்த்தைகள்!!!

இதயம் தான் தாளில் பதிப்பதில்லை.

நட்பின் வேர்களை வார்த்தை கரையான்கள்

அரித்து விடுமோ என்று!!!

வெறுமை


நீ இல்லாத நாட்களின்

வெறுமையை

உன் கவிதைகளின் வாசிப்பிலும்

உனக்கான கவிதைகளின் பிரசவிப்பிலும்

தொலைக்க துடிக்கிறது மனது

நிழலோடு தொடரும் என் இதயம்


எங்கோ உன்னை தொடரும் நிலவில் தான் கடைசியாய்

பார்த்தேன்

என் காணாமல் போன இதயத்தை !!!

கடந்து போன பார்வைகள்!!!


இளமையில்

பார்வை பரிமாறல்கள்

விழியால் காதல் விருந்து

இதழ்களால் இயலாத மொழிதல்கள்

இமைக்குலிருந்து அழகாய் வந்து செல்லும்

யாருக்கும் புரிவதில்லை

கண் வலி உறவுகளை தவிர

கண் வலி கண்டதெலாம் நினைவுடன் சேரும்போது

எங்கிருந்தோ வருகின்றன அலையா விருந்தாளி கனவுகள்

இப்படியே கவிஞன் ஆகிறான்

காதலன் ஆகிறான் ஆனால்

பணியாய் காதல் காற்றோடு களைய

எங்கோ வேறு யாருடனாவது

மீண்டும் தொடர்கிறது தேடல்

போன முறை அர்த்தம் தெரியாமல்

போன பார்வைகளின் உள்ளர்த்தம் தேடி

ரகசியம்!


பெண்ணே உன் ஒவ்வொரு உறசலளிலும் தேய்கிறது

உனக்குள் நீயும் எனக்குள் நானும் ஒலித்து வைத்த

ரகசியங்கள் !!!

ஒட்டுண்ணி!!!


காதல் வளர்வதாய் தெரியவில்லை

ஒட்டுண்ணி நட்புதான் உறிஞ்சி வளர்கிறது

நமக்குள் இருக்கும் புரிதல்களை!!!

காதலன்


காதலன் என்று சொன்னால் கனவுகள் தருவேன்

கணவன் என்று சொல் உயிரையும் தருவேன்