புதன், 25 மார்ச், 2009

பயணம்


பழகிய பாதை
நெடுந்தூர பயணம்
ஜன்னலோர இருக்கை
எதிரில் நீ
நான் ரசிப்பது எதை!!!

வெள்ளி, 13 மார்ச், 2009

குழந்தை





திருவிழா கூட்டத்தில் காணாமல் போன

குழந்தையாய் அழுது கொண்டிருக்கிறது என் மனது

நியோ வேடிக்கை பார்த்து கொண்டிருகிறாய்

தொலைந்த குழந்தையை மறந்து

அன்பானவள் !!!


விரசமிலாமல் உன் விழி நோக்கி

இருந்தால் போதும்

சலனமிலாமல் என் இளமை இன் இட்சைகள் சாகும்

தவிர்ப்பு


ஏன் என்னை தவிர்க்கிறாய்
யாராவது சொன்னார்களா
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
நான் சொல்லவில்லையே நீ யும் என்னை
காதலிக்க வேண்டும் என்று

கண்களின் வார்த்தைகள்


உன்னிடம்
என் இதயம் சொல்ல துடிப்பதை
என் இதழ்கள் சொல்ல மறுப்பதை
என் கண்கள் சொல்லி விடுகின்றன

ஜீவ நதி


ஆயிரம் அருவிகளால் கூட

மாற்றுக்கு உதாரணம் காட்ட

இயலாத என் ஜீவ நதி நீ

மனது


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய

பசுவாக தத்தளித்து திணறி நிற்கிறது

உன்னிடம் சிக்கிய என் மனது

மந்திரங்கள்


மந்தரித்து விட்ட கோழியாய் மனது
அதை மயக்கும் மந்திரங்கள் உன்னது

மறக்க முடியவில்லை


வேறொன்றும் வேண்டாம்

என் அருகிலயே இரு

உன்னை பார்த்தே நான் உலகை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் என்னை மறந்தது போல

உன்னை பார்த்தே நான் உன்னை மறக்க முயற்சிகிறேன்

மிச்சம்


நீ பிரிந்த பின்னும்

என்னோடு மிச்ச பட்டுவிட்டது

உன் புன்கையின் தாக்கங்களும்

என் புரையோடிய நினைவுகளும்

காதல் மொழி


காதல் இதயத்தின் தாய் மொழி
இதழ்களை விடவும்
கண்களே அதிகம் பேசுகின்றன!!

கவிதை


நம் காதலை பற்றி
கவிதை எழுத சொன்னாய்
எழுத முடியவில்லை
உண்மையை எப்படி பொய்யால் புகழ்வது

காதல் சிற்பி


நான் ஒரு சிற்பி
கண்ணீர் சிற்பி
காதலை செதுக்க வந்த
கண்ணீர் சிற்பி
முகத்தில் தாடி
நான் போட்ட வேலி
கண்ணீர் மட்டுமே
நான் கொண்ட தோழீ

புரிதல்


ஒரு துளி புரிதல் கூட இல்லாததால் இன்னமும் நிறையாமல்
கிடக்கிறது உனக்கும் எனக்குமான நட்பு கோப்பை
கனிந்து உருகும் காதலின் கைகளில்

கண்மணிக்கு



கண்மணிக்கு
கண்ணாய் என் கருத்தாய்
காதலாய் கனவாய்
சுவாசம் நிறை காற்றாய்
சுகமாய் சுமக்கின்ற வழியாய்
நிரம்பி வழிகிறாய்
ஞாபக கின்னங்களில்
வழிகிற துளிகளில் என்
நினைவும் கலைகிறது
வெறுமைக்குள் வெடிக்கும்
இதயத்தின் ஏக்க தணலில்
வேகுமா என் இன்றைய உணவிற்கான உலை

வெறுமைக்கும் வறுமைக்கும் இடையிலான

உரையாடல்களை ஒதுக்கி விட்டு

ஒடுங்கிய உடலில் வற்றி போய்விட்ட
நரம்புகளின் தளர்ச்சியையும் மீறி
நாடி துடிக்கிறது கண்கள் நிலைகுத்தி
மூச்சு அடங்கும் வேலைக்குள்
உன் முந்தானை காற்றில்
ஒரு மூச்சு வாங்கிவிடலாம் என்று