ஞாயிறு, 4 அக்டோபர், 2020

தனிமையின் வெம்மை

 நீண்டு கிடக்கும் நாட்கள்

தனிமையின் தாபம் பேசி இன்னும் நீழ்கிறது

நிலையற்று தளும்பும் நீரின் மேற்பரப்பென

நினைவு அலைபாய்கிறது

காற்றின் திசையில் விரையும் சருகென

மனம் உன் திசை பார்த்து தவிக்கிறது

புழுதி படர்ந்த புறவழிச்சாலையென

வெறிச்சோடிக்கிடக்கிறது நீ இல்லாத வீடு 

காட்சி மயக்கமாய் வீடெங்கும் பரவிக் கிடக்கும் காதல் நினைவுகள்

விரகத்தின் தவிப்பை கூட்டுகிறது

நீ இனி போகும் போது என் நினைவையும் கொத்திப் போய்விடு

தனிமையை வலியை சுயநினைவின்றியே கடத்தலாம்