நீண்டு கிடக்கும் நாட்கள்
தனிமையின் தாபம் பேசி இன்னும் நீழ்கிறது
நிலையற்று தளும்பும் நீரின் மேற்பரப்பென
நினைவு அலைபாய்கிறது
காற்றின் திசையில் விரையும் சருகென
மனம் உன் திசை பார்த்து தவிக்கிறது
புழுதி படர்ந்த புறவழிச்சாலையென
வெறிச்சோடிக்கிடக்கிறது நீ இல்லாத வீடு
காட்சி மயக்கமாய் வீடெங்கும் பரவிக் கிடக்கும் காதல் நினைவுகள்
விரகத்தின் தவிப்பை கூட்டுகிறது
நீ இனி போகும் போது என் நினைவையும் கொத்திப் போய்விடு
தனிமையை வலியை சுயநினைவின்றியே கடத்தலாம்