நான் ஒரு நதி
ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான்
என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில்
பயன் ஒன்றும் இல்லை
தரிசை பசுமையாக்கி
உழவனுக்கு பரிசாய் தருவேன்
நன்றி இருந்தால்
என் பாதையை செப்பனிடுவான்
இல்லாதவன் என்னை தனதாக்கி
கொள்ள பார்ப்பான்
யாருக்கும் அடங்குவதில்லை நான்
யாருக்கும் புரிவதில்லை
அணை கொண்டு
என்னை அடக்கிட துணிந்தால்
முட்டி நான் பார்பேன்
முடியாது போனால்
மூழ்கடித்து போவேன்
நான் ஒரு நதி ஓடிகொண்டே உள்ளேன்
நற்பாதை தான் என் வலி என்று கொண்டால்
நான் ஓடி புவியில் பயன் ஒன்றும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக