
உன்னோடு காதலை சொன்ன பொழுதிலும் வெட்கப்பட்டாய்
பின் கை கோர்த்து நடக்கலாம் என்றேன் வெட்கப்பட்டாய்
கோவிலில் பேசவும், கடற்கரையில் சந்திக்கவும்,
ஏன் என் கண்கள் பார்த்து பேச கூட வெட்கப்பட்டாய்
வெட்கத்தோடு சந்தித்தோம்
வெட்கத்தோடு பிரிந்தோம்
என் மீதான காதலும், உன் வெட்கமும்
உன்னை விட்டு பிரியாதிருந்தது
முதன் முதலாய் அரிதானதொரு சமயத்தில்
முத்தங்கள் கேட்டேன் தயங்கி, தயங்கி
முத்தமிட்டாய் நானும் முதன் முதலாய்
உன்னோடு சேர்ந்து வெட்கப்பட்டேன்!!!
1 கருத்து:
Very nice...
கருத்துரையிடுக